வியாழன், 19 ஜூலை, 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஏகரூப சௌந்தர்ய பேரழகே போற்றி!
ஏழிசையாய் எங்கும்நிறை மந்திரமே போற்றி!
ஏழைகளின் துயர்துடைக்கும் எழில்கரமே போற்றி!
ஏந்திழையே தமிழ் பெற்ற நல்வரமே போற்றி!

ஏணியென அடியவரை ஏற்றிநிற்பாய் போற்றி!
ஏடு உடை மாணவர்க்கு வழங்கிடுவாய் போற்றி!
ஏறுவண்டி கணிணிகூட எடுத்தளித்தாய் போற்றி!
ஏதுமற்ற வரியவரின் பெரும்பொருளே போற்றி!

ஏவலர்கள் காவலர்கள் நலம்காத்தாய் போற்றி!போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!





எல்லாமாகி நின்ற ஒளிவிளக்கே போற்றி!
எந்நாளும் அருள்செய்யும் தெய்வமே  போற்றி!
எப்போதும் துயர்களையும் பேரருளே  போற்றி!
எதிர்ப்போரே இல்லாத பெருந்துணிவே  போற்றி!

எட்டாவது அதிசயமே! திருமகளே  போற்றி!
எண்ணெழுத்தாய் நிறைந்த புது கலைமகளே  போற்றி!
எழிலனைத்தும் விதைத்திட்ட நிலமகளே  போற்றி!
எதிர்மறைகள் சிதைத்திட்ட புதுமறையே  போற்றி!

என் தாயே! குலவிளக்கே!  போற்றி! போற்றி!

வெள்ளி, 13 ஜூலை, 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஓடும் நல்நதியே போற்றி!
ஓவியப் பேரழகே  போற்றி!
ஓங்கார தனிப்பொருளே  போற்றி!
ஓய்விலா பெருநெருப்பே  போற்றி!

ஓராயிரம் நிலவின் ஒளியழகே போற்றி!
ஓசையை இசையாக்கும் உன்னதமே  போற்றி!
ஓதும்மறையின் உட்பொருளே  போற்றி!
ஓதுவார்தமை உயரவைத்தாய்  போற்றி!

ஓர்குலம் எல்லோரும் என விதித்தாய்  போற்றி! போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!




ஒப்பிலா மணியே போற்றி!
ஒல்காப்புகழ் தேவியே போற்றி!
ஒச்சமில் நிறைவே போற்றி!
ஒன்றென நின்றாய் போற்றி!

ஒழுக்கத்தின் நல்ல சுடரே போற்றி!
ஒழுகும் கருணை மொழியே போற்றி!
ஒருகோடி மலரின் மணமே போற்றி!
ஒருபோதும் பயமற்ற துணிவே போற்றி!

ஒளியே! வழியே! விழியே! போற்றி! போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!





ஐம்பூதமாகி நின்றாய் போற்றி!
ஐம்புலன்களை வென்றாய் போற்றி!
ஐந்திணை நிலங்கள் ஆள்வோய்  போற்றி!
ஐந்திருகோடி தமிழர்தம் வாழ்வே போற்றி!

ஐயமகற்றிய விளக்கே போற்றி!
ஐப்பசி மழையின் குணமே போற்றி!
ஐம்பொன்சிலையின் அழகே போற்றி!
ஐராவதமேறி ஆட்சிசெய்திருவே போற்றி!

ஐந்தெழுத்து மந்திரமே போற்றி! போற்றி!

ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரட்சித்தலைவி போற்றி!





ஊற்றான உயிரமுதே போற்றி!
ஊராரின் பேரருளே போற்றி!
ஊக்கமெலாம் வளர்ப்பாய் போற்றி!
ஊட்டமெலாம் கொடுப்பாய் போற்றி!

ஊராட்சி வளர்த்தாய் போற்றி!
ஊடகத்துறை காத்தாய் போற்றி!
ஊமைகளின் மொழியே போற்றி!
ஊனமுற்றோர் வழியே போற்றி!

ஊருக்கே உழைத்தாய் போற்றி! போற்றி!

புரட்சித்தலைவி போற்றி!





உண்மையின் ஒளியே போற்றி!
உன்னத வழியே போற்றி!
உறுபகை முடிப்பாய் போற்றி!
உயர்தமிழ் வளர்ப்பாய் போற்றி!

உயிரினம் வளர்துளி போற்றி!
உடல்நலம் காப்பீடே போற்றி!
உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி!
உணர்வெலாம் கலந்தாய் போற்றி!

உச்சிகுளிர் மாமழையே போற்றி! போற்றி!

வெள்ளி, 6 ஜூலை, 2012




அன்னையின் பக்தர்களே! வணக்கம்!நேற்று ஒரு கருநா(க) அபிமானி `உங்க அம்மா ஆட்சி வந்தால் மழை வளம் பொய்க்காது என்றீர்களே என்னாச்சு?` என்று கிண்டல் செய்தான்.
அந்த மூடனை அடுத்த நொடியே பதிலால் அடித்தேன்` தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே இந்த ஆண்டு பருவ மழை தாமதமாகித் தான் வருகிறது.அதற்கு உன் கருநா(க) தலைவனும்,இத்தாலி சோனியாவும் சேர்ந்து நடத்திய இலங்கை தமிழர்களின் படுகொலைகள் எனும் பாவம் தான் காரணம் `என்று, அந்த மாட்டு தோலுக்கு உறைத்ததோ இல்லையோ, நண்பர்களே...உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...மஹா மாரியான நம் அன்னையின் ஆட்சியில் மழைவளம் பொய்த்ததென மடையர்கள் உளற இடம் தரலாகாது.ஒவ்வொரு கழகத்தோழரும் மனமுருகி வருணபகவானை அழைப்போம்! ஊருக்கு சோறிடும் உழவன் வளப்பட ,நம் அன்னை புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி பொலிவு பெற ,வான் மழையே! தாமதமின்றி தமிழகத்திற்கு வா மழையே!என வேண்டுவோம்.தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் கைகூப்பி ,மனமொன்றி, அவரவர் கடவுளை அன்புடன் வேண்டுவோம்! உண்மையான பக்தர்களான நாம் உள்ளம் உருகி வேண்டிட நிச்சயம் வரும் மழை! செய்வீர்களா...?

செவ்வாய், 26 ஜூன், 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஈழத்தை காத்தாய் போற்றி!
ஈடுஇணை அற்றாய் போற்றி!
ஈட்டிமுனை அறிவோய் போற்றி!
ஈனப்பதர்களை வென்றாய் போற்றி!

ஈழவர்துயர் துடைத்தாய் போற்றி!
ஈகைக்குணம் படைத்தாய் போற்றி!
ஈரமனம் கொண்டாய் போற்றி!
ஈதலினால் உயர்ந்தாய் போற்றி!

ஈன்றவளே என் தாயே! போற்றி!போற்றி!

திங்கள், 25 ஜூன், 2012

புரட்சித்தலைவி போற்றி!



இல்லாமை ஒழித்தாய் போற்றி!
இலவசங்கள் அளித்தாய்  போற்றி!
இரட்டை இலை வளர்த்தாய்  போற்றி!
இதயதெய்வமென சிறந்தாய் போற்றி!

இனமானம் காத்தாய்  போற்றி!
இந்தியாவின் மறத்தாய் போற்றி!
இளைஞர்களின் நீதியே  போற்றி!
இருளகற்றிய ஜோதியே  போற்றி!

இனிய தமிழ் பூமகளே போற்றி!

சனி, 23 ஜூன், 2012

புரட்சித்தலைவி போற்றி!



ஆற்றலின் தோற்றமே போற்றி!
ஆற்றிடும் தேற்றமே போற்றி!
ஆநிரை அளித்தாய் போற்றி!
ஆனந்தம் நிறைத்தாய் போற்றி!

ஆதங்கம் தவிர்த்தாய் போற்றி!
ஆபத்தில் காப்பாய் போற்றி!
ஆதிக்கம் ஒழித்தாய் போற்றி!
ஆதித்தன் சுடரே போற்றி!

ஆட்சியில் சிறந்தாய் போற்றி!

சனி, 16 ஜூன், 2012


நடந்தாய்  வாழி காவேரி...! 


வேறிடம் கருவாகி தமிழ்நிலம்
விளங்கிட நடந்தாய் வாழி!
நடந்திடும் வழியெலாம் பொன்னாக
வளம்வாரி பொழிந்தாய் வாழி!


பூமியில் பசுந்தளிர் வேரெலாம்
நீராய் நிறைந்தாய் வாழி!
புதுப்புனல் செழுங்கனல் அனைத்துளும்
புகுந்துயிர் கொடுத்தாய் வாழி!



துளித்துளி உயிராய் அணுக்களில் ஓடி
துடித்திடும் துடிப்பாய் விரிந்தாய் வாழி!
பனித்துளி நீராய் பவித்திரமானாய்
மணிச்சுடர் தெறிப்பாய் நிறைந்தாய் வாழி!


உலகெலாம் சாதனை விதைத்தாய் வாழி!
உயிரெலாம் வேதனை குறைத்தாய் வாழி!
பகையெனும் தருக்கரை சிதைத்தாய் வாழி!
பணிந்திடும் தொண்டரை நிறைத்தாய் வாழி!

புதன், 25 ஏப்ரல், 2012

எங்க அம்மா ஏன் தனது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் மரம் நட சொன்னார்கள் என்ப்தும், மழை நீர் சேகரிக்க திட்டம் கொண்டுவந்தார்கள் என்பதும் அறிவுஜீவிகள் என்று தங்களை தாங்களே முடிசூட்டிக் கொள்பவர்கள் இப்போதாவது புரிந்துகொண்டால் சரி...தினமணிக்கு நெஞ்சிலிருந்து நன்றி!

கண்ணிருந்தும் குருடராய்...

மகாபாரதத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகின. முதலாவதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடஸ்ராஜ் சிவன் ஆலயத்தில் உள்ள நச்சுப்பொய்கை வற்றுகிறது என்பது. இரண்டாவது, உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிந்தூர் கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலின் பாரிஜாத மரம் பட்டுவிட்டது என்பது.
நீர் அருந்த நச்சுப்பொய்கைக்குச் சென்ற பாண்டவர் சகோதரர்கள், அதைப் பாதுகாத்து நின்ற பூதத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மயக்கமுற, தருமர் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்து மீட்டு வந்ததாக மகாபாரதத்தில் ஒரு கட்டம் வரும். "யட்சப் பிரஸ்னம்' என்று சொல்லப்படும் அந்தக் கேள்வி பதில்கள் பல உள்ளார்ந்த தத்துவங்களை வெளிப்படுத்துவதாக அமையும். கோன் பனேகா குரோர்பதி, டீலா நோ டீலா, கோடீஸ்வரர் ஆகலாம் போன்ற இன்றைய வெற்றிபெற்ற டிவி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி இந்த வினா-விடை போட்டி.
அதேபோன்று பாஞ்சாலி கேட்டதற்காக பாரிஜாத மலரை வீமன் தேடிக் கொண்டு வந்ததாக மகாபாரதம் சொல்கின்றது. தாய் குந்தியின் வழிபாட்டுக்காக பாரிஜாத மரத்தையே அர்ஜுனன் கொண்டுவந்ததாகவும், அதனைக் குந்தி இங்குள்ள சிவன் கோயிலுக்கு அளித்துவிட்டதாகவும் மரபுவழியிலான மகாபாரத கிளைக் கதைகள் சொல்கின்றன. கிராமத்தின் பெயரே (கிந்தூர்) குந்தி என்பதன் திரிபுதான் என்கிறார்கள்.
இந்தியாவில் பிற இடங்களில் மிக அரிதாக பாரிஜாத மரங்கள் இருந்தாலும்கூட, கிந்தூரில் உள்ள பாரிஜாத மரம் பல வகையிலும் மாறுபட்டது. பூக்கள் பூக்கும் தருணம் அந்தச் சூழலே ரம்யமாக மாறிவிடுமாம். மணம் பரப்பும் வெண்மையான மலர்கள் உதிரும்போது பொன்நிறமாக மாறிவிடும் என்கிறார்கள்.
இதன் பூக்கள் காயாகி விதையாவதில்லை. இதன் கிளைகளைக் கொண்டு பதியம் போட்டு மரம் வளர்க்கலாம் என்றால் அதுவும் நடைபெறவில்லை. ஏனென்றால், பாரிஜாத மரத்தில் இது ஆண் வகை. உலகத்திலேயே இந்தவகைப் பாரிஜாத மரம் ஒன்றுதான் இருக்கிறது என்கிறார்கள் தாவரவியல் வல்லநுர்கள்.
ஃபைசாபாத்தில் உள்ள நரேந்திர தேவ் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர்கள் குழு இந்தப் பாரிஜாத மரத்தை அண்மையில் ஆய்வு செய்து, பட்டுவரும் இந்த பாரிஜாத மரத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இங்குள்ள மக்கள் இதற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். பேராசிரியர்கள் மரத்தை ஏதாவது செய்து கொன்றுவிடுவார்களோ என்கின்ற அச்சம்தான் காரணம். சுமார் 1000 ஆண்டுகள் முதல் சுமார் 4000 ஆண்டுகள் வரை இதன் வயது இருக்கலாம் என்கிறார்கள். இந்த அரிய மரம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
பாரத மக்கள் அனைவரும் தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதன் அடையாளம்தான் கோயில்களில் உள்ள மரங்கள். இந்திய மண்ணில்தான் மரங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சமும், தீர்த்தமும் (குளம்) உண்டு. எந்த தட்பவெப்பத்தில், எத்தகைய மண்வளத்தில் கடல்மட்டத்திலிருந்து எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், அதன் மருத்துவக் குணங்களையும் தெரிந்துதான் கோயில்களில் ஸ்தல விருட்சங்களை வைத்துள்ளனர் நமது மூதாதையர். மா, பலா, புன்னை, மகிழம், மருதம், வன்னி, பன்னீர், பத்திரி, அரசு, வேம்பு என பல்வேறு மரங்களை ஸ்தல விருட்சமாக வைத்துப் பாதுகாத்து வந்தனர்.
கோயில்களில் பாதுகாக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் அந்த வகை மரங்களிலேயே மிகவும் தனித்துவமானவை. இந்த மாமரம் போனால் இன்னொரு மாமரம் என்பதைப் போன்றதல்ல. அதைத்தான் கிந்தூர் பாரிஜாத மரம் நமக்கு உணர்த்துகின்றது. அவை மிக அரிதான மரங்கள். ஆகையால்தான் இந்த மரங்களுக்கு அதீத மருத்துவக் குணங்கள் இருந்தன.
தீர்த்தம் (குளம்) என்பதும், அந்தக் கோயில் அமைந்துள்ள மண்ணின் கனிமத் தன்மையால் குளத்து நீர் வேதியியல் மாற்றம் பெற்று மருத்துவக் குணம் பெறும் வகையிலேயே அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோயில் குளத்துக்கும் ஒரு விசேஷம். ஆகவேதான், ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கோயில் குளத்தின் நீரைப் பரிந்துரைத்தார்கள்.
இன்று எல்லா கோயில்குளங்களும் வற்றிக் கிடக்கின்றன. திருநள்ளாறு, கும்பகோணம் மகாமகம் குளங்களில் விழாக் காலங்களில் லாரிகளில் நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறார்கள். பல்லாயிரம் பேர் குளிப்பதால், சுகாதாரம் கருதி குளோரினைக் கொட்டுகிறார்கள். இதனால் என்ன பலன் கிடைத்துவிடும்? ஆன்மிகப் பலனும் இல்லை. அறிவியல் உண்மையும் இல்லை.
சமயத்துடன் இணைந்து இறைவழிபாட்டின் ஒரு பகுதியாக மரங்களை ஸ்தல விருட்சங்களாக்கிய நமது மூதாதையரின் தொலைநோக்குப் பார்வையை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்தல விருட்சங்களுக்குப் புனிதத் தன்மை தரப்படுவதால் அந்த மரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கோயில் தோறும் குளம் அமைப்பதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்பதும் விஞ்ஞானம் வளராத காலத்து மூதாதையருக்கு இருந்தது. படித்துப் பட்டம் பெற்றதாலேயே புத்திசாலிகளாகி விட்டதாகக் கருதும் நம்மால் அவர்கள் வைத்துவிட்டுப் போனதைக் காப்பாற்றக்கூட முடியவில்லை.
இருப்பதையும் இழந்துவிடாமல் இருக்க வழி காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம், நமது தமிழகத்திலாவது...
நன்றி: தினமணி 26.04.12

சனி, 24 மார்ச், 2012

மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லாத கடன்: ஜெயலலிதா


பேசாத மனிதரின் சார்பிலும்

பேசுகின்ற தெய்வம்!-காது

கேளாத மனிதரின் துயரையும்

கேட்கின்ற இதயம்!


நடக்க இயலா மனிதருக்காகவும்

நடைபோடுகின்ற அரசு! - இந்த

நானிலத்தில் நமதன்னைக்கு

நிகரில்லையென கொட்டு முரசு!

வியாழன், 23 பிப்ரவரி, 2012

பிள்ளைகள் தான் பிறக்கிறார்கள்- அம்மா அவதரிக்கிறாள் ! (24.02.12)



கோடிக் கண்களில்

கொஞ்சும் கருணையும்

நாடி வருபவர்

நலம்பெற அருளையும்


வாரி வழங்கிடும்

வள்ளலின் வழியே!

மாரி நிரந்தரி!

பனித்ததென் விழியே!


பாடித் துதிப்பவர்

பாவளர் கருவே!

பழகு செந்தமிழின்

அழகிய உருவே!


மோகம் அறுத்திடும்

முனிகளின் தவமே!

தாகம் தணித்திடும்

தமிழர்தம் வரமே!


அறுசுவையாவிலும் நறுசுவையாவது

அன்னையின் மொழி சுவையே!என

தன்னையின் மொழி சுவையே!


நிலமகள் உளமகிழ் நீணிலம் யாவிலும்

அன்னையின் கொடி பறக்கும்! என

தன்னையின் கொடி பறக்கும்!


வடமுதல் தென்வரை இருஇலை துளிர்விட

விதையினை தாய் விதைப்பாள்!அதில்

வேறெனவும் இருப்பாள்! வெற்றிச்

சுடரெனவும் உதிப்பாள்!

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

ஆடம்பர விழாக்களைத் தவிர்க்க வேண்டும்; 40 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும்: ஜெயலலிதா

பெற்ற தாயினும் பெரிய தாயே..! உனை வணங்கிட கற்ற தமிழிலும்

வார்த்தைகள் தேடி களைத்து போகிறேன்..!முன்னை வினைப்பயன்

முற்றுப்பெற்றிட முதல்வராகினாய்! ம்ற்று யாது நான் கூறிட தாயே

மனமுருகினேன்! பக்தியுடன் அம்மா என் தெய்வம் வல்லம் தமிழ்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

'தானே' நிவாரண பணிகளில் உலக சாதனை:பேரவையில் ஜெ. பேச்சு

'தானே' நிவாரண பணிகளில் உலக சாதனை:பேரவையில் ஜெ. பேச்சு
ஆட்டம் காட்டிய அரசியல் புயலுக்கெல்லாம் தண்ணி காட்டிய தங்கத்தாரகை எங்க அம்மா...இந்த தானே புயல் போலே இனி எந்த மகா புயல் வந்தாலும் அதை சமாளிக்கத் தான் காங்கிரீட் வீடுகள் கட்டித் தர திட்டம்.ஒருவகையில் தானே புயல் கூட என் தாயின் ஆட்சியில் அடித்ததால் தான் கடலூர் மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கிடைத்தன,போன ஆட்சியில் புயல் வந்திருந்தால் தானே புயல் பேரைச் சொல்லி தாத்தாவின் மெகா குடும்பத்தில் யாராவது ஒருவர் குபேரனாயிருப்பார்...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

புரட்சித் தலைவர் பிறந்த நாள்! 17.01.2012


நடிப்பு துறையிலிருந்து நாடாள வந்தாய்

நாடாளும் போது நடிக்க மறந்தாய்!


வேற்று மாநிலம் நீயென புளுகிடும்

வெற்று கோஷங்களை நின்

வேலைத்திறத்தால் வேரோடு சிதைத்தாய்!


தன் மக்கள் நலம் நாடும்

தருக்கர்களின் பிடிவிலக்கி

தமிழ் மக்கள் நலம் பெறவே

தரும யுத்தம் செய்தாய்!


மக்கள் செல்வாக்கை சந்தை பொருளாக

மலிவாய் வாங்கிடவே மனக்கோட்டை கட்டியோரின்

குணக்கேட்டை அழித்தாய்..! இனம்

கொன்றாரை வென்றாய்!


என் தலைவா....!

எங்கே நீ இறந்தாய்...?

இதோ...

மறுபடியும் படித்தாலும் புரிந்திடுமே...நின்

மறுபிறவி அம்மாவின் வடிவில்

அருளாட்சி செய்வது உலகம் அறிந்திடுமே..!


புதன், 11 ஜனவரி, 2012

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்


t


தாய் சொல்லை மீறிய

நட்சத்திர குழந்தையொன்று

வான விளிம்பிற்கு வந்து

வழுக்கி விழுந்தது பூமியில்..


காணாமல் தாய்முகத்தை

கலங்கி அழுதது...கண்ணீர் விட்டது..

எப்படி சேர்வேன் என் தாயை மீண்டுமென

ஏங்கி பரிதவித்து ஏமாந்து நின்றது..


குழந்தைகள் கூட்டமொன்று-குட்டிமீன்

கூக்குரலை கேட்டுநொந்து

பட்டம் செய்ததிலே படுக்கவைத்து விண்துளியை

பரிவுடனே அனுப்பிவைத்தார் தாயிடத்தில்


சிறுகுழந்தை பட்டமெல்லாம்

சேர்ந்த்திடுமா விண்வெளியை..?

சோர்ந்து களைத்தவர்கள்

சேர்ந்தனர் தம் ஆசனிடம்

சொல்லியழுதனர் தாய்பிரிந்த

சுடர்குழந்தை சோகத்தினை...


ஆசிரியர் நேசமுடன் அரவணைத்து பாசமுடன் கேட்டார்

`எத்தனை மைல் தூரமுந்தன் தாயின் இருப்பிடம்?

எப்படிதான் இருக்குமுந்தன் தாயின் திருமுகம்?


பாவம் பட்டுத்துணுக்கு போலே

பளீரிட்ட வான் குழந்தை

ஏதுமறியாது பரிதவித்து நின்றது

எதுவும் தெரியாது நான் சிறுகுழந்தையென்றது


ஓடிச்செல்லுங்கள் அறிவியலார்

ஒருவரிடம் என்றார் ஆசிரியர்

விஞ்ஞானி குழந்தையின் விம்மல் தாங்காமல்

விண்கலம் செய்ததிலே விண்ணுக்கு அனுப்பி வைத்தார்


பாவம் அந்த கலனும்

பாதியிலே திரும்பி வர

அழுதபடி அதனுள்ளே

அபலையாய் அக்குழந்தை...


என் செய்ய...?


வலியவிதி வழிநடத்த

வழிதவறி வந்த பிள்ளை

தனித்து தவித்திருக்க

இருண்டது வானவெளி...


இறைத்த பொறி போலே..

எங்கும் நட்சத்திரம்...

எது எனது தாயின் முகம்...?

எது எனது தாயின் கரம்...?


பக்கத்து வீடொன்றின்

படிதாண்டி ஒருகுழந்தை

தவழ்ந்து வந்திந்த

தளிர்மீனின் அருகமர்ந்து தடவிகொடுத்தது


அம்மாவை அடைவதற்கா வழி வேண்டும்

அடப்பாவி..இப்போது பாரென்று

கைதூக்கி கண்மூடி

முகம் சுளித்து முழுக்குரலில்

`அம்மா`வென அலறியது...


ஒரு நொடியில் உள்ளிருந்து

ஓடோடி வந்த தாயோ..

நட்சத்திரம் பூமியிலே ஒளிர்வதையும் பாராது

தன் குழந்தை முகம்துடைத்து தழுவியபடி உள்சென்றாள்


நட்சத்திர குழந்தைக்கும் நம்பிக்கை மின்னியது..!


கைதூக்கி முகம் வாடி

கண்மூடி வான் நோக்கி

`அம்மா`வென ஓலமிட்டு

அழைத்த நொடி வானின்று

வழிந்து இறங்கியது ஒளிக்கீற்று..!

வாரி அணைத்து வருடியபடி சென்றாள் நட்சத்திர தாய்..!


எளியோரின் நலம் பேண

இளைத்தோரின் துயர் களைய

வலியோரின் வார்த்தைகளோ

வண்ணமிகு வருணணையோ

உதவாது ஒரு போதும்...


முகம் வாடி கைதூக்கி நோய்நீக்க

முழு மனதாய் நம்பிக்கையுடன்...

`அம்மா`வென அழுது அழைத்தோருக்கு

என் தாயே..! தங்கத் தாரகையே..! நீ

ஒரு நொடியில் ஓடிவந்து துயர் களைந்தாய்!

ஒப்பற்ற திட்டம் தந்தாய்..!


வாழி நின் புகழ்! வையம் உள்ளவரை...!


பக்தியுடன்

அம்மா என் தெய்வம்

வல்லம் தமிழ்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

அரசு ஊழியர்களுக்கு ரூ 3 ஆயிரம் போனஸ்: முதல்வர் உத்தரவு


அரசு ஊழியர்களுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஏதோ இணைய முடியாத பெரும்பகை இருப்பதைப்போல் படம் காண்பித்து அந்த மாயத்தோற்றத்தை நம்பி ஏமாந்த அப்பாவி அரசு ஊழியர்களை தங்களது வழ்க்கமான அடுக்குமொழி ஏமாற்று வித்தையால் மயக்கி தங்களது ஓட்டு வங்கியாக வைத்திருந்த வஞ்சகர்களின் சூழ்ச்சியை இப்போதாவது அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அம்மா அரசு ஊழியர்களுக்கு செய்த நன்மைகளை வரிசையாக என்னால் பட்டியலிட முடியும்

1 . உச்ச நீதி மன்றமே வேலைநிறுத்தம் செய்வது சட்ட விரோதம் தான் என கைவிரித்த பிறகும் எங்க அம்மா தனது தணியாத கருணை கரம் விரித்து ஆதரித்ததால் தான் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அன்று பணியில் சேர முடிந்ததே தவிர இவர்கள் ஏமாற்றுவது போல் வழக்கு போட்டு ஜெயித்ததால் இல்லை.இதை விட பெரிய கொடுமை வேலை நிறுத்த தடை சட்டத்தை நீக்குவோம் என சத்தியம் செய்து அரசு ஊழியர்களை தங்களது வாக்கு வங்கியாக இன்னும் கூடுதலாக தங்கள் கட்சி அடிப்படை தொண்டன் போல் வேலை வாங்கி கொண்ட கட்சிகள் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்து பல வருடங்கள் ஆன பின்னும் ஏன் இன்னும் அரசு ஊழியர் வேலைநிறுத்த தடைசட்டத்தை திரும்ப பெற வில்லை??.

2 இன்று மத்திய அரசு ஊழியருக்கு இணையாக சம்பளம் பெறும் அரசு ஊழியர் ஒவ்வொருவரும் நன்றியோடு என் தெய்வம் அம்மாவை நினைத்து பார்க்க வேண்டும்.ஏனெனில் இன்று நீங்கள் வாங்கும் சம்பளம் தனது ஆட்சி காலத்தில் எங்க அம்மா இட்ட(நீங்கள் பலர் தூண்டிவிட்டு நடத்திய போராட்டத்திற்கு பிறகும்) அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் அரசு ஆணையின் அடிப்படை ஊதியத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 .மனதை தொட்டு சொல்லுங்கள் அரசு வேலையில் அரசியல் குறுக்கீடு என்பது அம்மா ஆட்சியில் நடக்க முடியுமா?சாதாரண வட்டக்கிளை செயலரிடம் பல அதிகாரிகள் கை கட்டி நின்றதை நாம் போன ஆட்சியில் பல முறை பார்த்திருக்கலாம் ,இன்று ஏதேனும் ஒரு அமைச்சர் அப்படி மிரட்டிவிட்டு பதவியில் தொடர முடியுமா? சுத்தமான ,அச்சமற்ற சூழலில் நீங்கள் பணியாற்றுவதை எங்க அம்மாவை தவிர யாரால் உத்திரவாதபடுத்த இயலும்? அப்படி பயமற்று சுதந்திரமாக பணிபுரிவதை விட சில ஆயிரம் ரூபாய் சலுகைகள் பெரிதென்றா நினக்கிறீர்கள்..? இனியாவது கருணையும் ,கண்டிப்பும் இரு கண்களாக கொண்டு அருளாட்சி நடத்தும் என் தெய்வத்தின் அரசாட்சிக்கு துணை நின்று வரலாற்று சாதனைகள் நிகழப்போகும் இந்த காலகட்டத்தின் ஒருசாட்சியாக மாறுங்கள்...மிகுந்த நன்றியுடன் அம்மா என் தெய்வம் வல்லம் தமிழ்