திங்கள், 26 டிசம்பர், 2011

தங்கத்தாரகையே...! தாயே..!



நீதியும் நேர்மையும் கண்களாய் கொண்டாள்!

நீசர்கள் தமக்கே நெருப்பாய் நின்றாள்!

ஆதியும் அந்தமும் நானே என்றாள்!

அழிவிலா பெரும்புகழ் அடைவாளென் தாய்..!



`ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்`

வங்ககடலோரம் கண்ணுறங்கும் வள்ளல் சொன்னதை

தங்கத்தாரகையே நீ தட்டாமல் செய்தாய் -அதனால்

வள்ளலின் வாரிசு நீ தான் என்று மெய்ப்பித்தாய்...!


வியாழன், 6 அக்டோபர், 2011

முழு நிலவு...!

முழுநிலவின் ஒளியழகை

தெருவிளக்கா தெரியச்செய்யும்?

கலைநிலவே உனதெழிலை

அணிகலனா அறியச்செய்யும்..?

அணிந்ததனால் பொன்நகைகள்

அழகு பெற்றன அன்று...

பொறுக்காத குறுமதியார்

பொய்புரட்டை அவிழ்த்துவிட

புன்னகையே அணிகலனாய்

புனைந்திருந்தாய் வெகுகாலம்

அன்னையர்கள் மனமுருகி

அனுதினமும் கேட்டபின்பும்

தவம்போலே தவிர்த்திட்டாய்

தங்கநகை என் தாயே....

அம்மா உன் துறவு நிலை

சகியாத தொண்டர்களின் குரல்வலுத்து

உயிர்மறுத்து அணிவகுத்தார்

என் மக்கள் தொண்டர்களே

என்ற சொல்லை மெய்ப்பிக்க

தாலிக்கு தங்கம் தந்து

ஆணையிட்ட கையினால் தான்

அணிந்துகொண்டாய் பூத்தோடு...!

அம்மா...என் தெய்வமே...!

அரக்கர்கள் மொழிகேட்டு-அதை

களைவதை நிறுத்திவிடு இத்தோடு...!






செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இதயக்கனியின் இதயத்துடிப்பு..!


கல்லறையின் மீதும் காதுவைத்து

புரட்சித்தலைவரின்

கடிகார துடிப்பு தேடும்

கண்மணிகளே...!

கண்திறந்து கவனித்துப் பாருங்கள்...

அம்மாவின் ஆட்சியெனும் வடிவில்

இப்போது அவரது

இதயத்துடிப்பே

உணரக்கிடைக்கும் உங்களுக்கு...!


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மகா மாரி...!


தேன் கூடு திரண்டது போல்

நிறங்கொண்ட வானம் நேற்று

வழிந்தது மதுத்துளியாய்

வழியெங்கும் வெள்ளக்காடு

மழையாய் பொழிந்து இந்த

மண்ணை வளப்படுத்துபவளை

நாங்கள் மாரி என்போம்...!- அந்த

மழை நீர் சேகரிக்க திட்டம் தீட்டி-எங்கள்

மனதெல்லாம் குளிர வைத்தாய் உன்னை

மகா மாரி என்போம்...!


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நல் சுடரே...!

நேற்றொன்று சொல்லி பின்பு

இன்றொன்று மாற்றி இனிமேல்

நாளையென் சொல்வோம் எனவே

நாடகம் பிதற்றும் பொய்யர்


நடுவினில் உதித்த நல்சுடரே வாழி!

எடுத்த நல்முடிவினில் என்றும்

நழுவாத மனத்துணிவு! வார்த்தை

பிறழாத அறச்செறிவு !

தூய்மையே வாய்மையாய் கொண்டாய்

துயரில்லை இனி உனக்கு!

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

அம்மா என் தெய்வம்!


கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து

துயர் களைந்தால்- அது

குல தெய்வம்!

அம்மா! அம்மா! என

அழைத்திடும் தொண்டர்கள்

அனைவர்க்கும் அபயமளிப்பதால்

நீ தான்

தமிழர்களின் குலதெய்வம்...!