
கோடிக் கண்களில்
கொஞ்சும் கருணையும்
நாடி வருபவர்
நலம்பெற அருளையும்
வாரி வழங்கிடும்
வள்ளலின் வழியே!
மாரி நிரந்தரி!
பனித்ததென் விழியே!
பாடித் துதிப்பவர்
பாவளர் கருவே!
பழகு செந்தமிழின்
அழகிய உருவே!
மோகம் அறுத்திடும்
முனிகளின் தவமே!
தாகம் தணித்திடும்
தமிழர்தம் வரமே!
அறுசுவையாவிலும் நறுசுவையாவது
அன்னையின் மொழி சுவையே!என
தன்னையின் மொழி சுவையே!
நிலமகள் உளமகிழ் நீணிலம் யாவிலும்
அன்னையின் கொடி பறக்கும்! என
தன்னையின் கொடி பறக்கும்!
வடமுதல் தென்வரை இருஇலை துளிர்விட
விதையினை தாய் விதைப்பாள்!அதில்
வேறெனவும் இருப்பாள்! வெற்றிச்
சுடரெனவும் உதிப்பாள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக