தாய் சொல்லை மீறிய
நட்சத்திர குழந்தையொன்று
வான விளிம்பிற்கு வந்து
வழுக்கி விழுந்தது பூமியில்..
காணாமல் தாய்முகத்தை
கலங்கி அழுதது...கண்ணீர் விட்டது..
எப்படி சேர்வேன் என் தாயை மீண்டுமென
ஏங்கி பரிதவித்து ஏமாந்து நின்றது..
குழந்தைகள் கூட்டமொன்று-குட்டிமீன்
கூக்குரலை கேட்டுநொந்து
பட்டம் செய்ததிலே படுக்கவைத்து விண்துளியை
பரிவுடனே அனுப்பிவைத்தார் தாயிடத்தில்
சிறுகுழந்தை பட்டமெல்லாம்
சேர்ந்த்திடுமா விண்வெளியை..?
சோர்ந்து களைத்தவர்கள்
சேர்ந்தனர் தம் ஆசனிடம்
சொல்லியழுதனர் தாய்பிரிந்த
சுடர்குழந்தை சோகத்தினை...
ஆசிரியர் நேசமுடன் அரவணைத்து பாசமுடன் கேட்டார்
`எத்தனை மைல் தூரமுந்தன் தாயின் இருப்பிடம்?
எப்படிதான் இருக்குமுந்தன் தாயின் திருமுகம்?
பாவம் பட்டுத்துணுக்கு போலே
பளீரிட்ட வான் குழந்தை
ஏதுமறியாது பரிதவித்து நின்றது
எதுவும் தெரியாது நான் சிறுகுழந்தையென்றது
ஓடிச்செல்லுங்கள் அறிவியலார்
ஒருவரிடம் என்றார் ஆசிரியர்
விஞ்ஞானி குழந்தையின் விம்மல் தாங்காமல்
விண்கலம் செய்ததிலே விண்ணுக்கு அனுப்பி வைத்தார்
பாவம் அந்த கலனும்
பாதியிலே திரும்பி வர
அழுதபடி அதனுள்ளே
அபலையாய் அக்குழந்தை...
என் செய்ய...?
வலியவிதி வழிநடத்த
வழிதவறி வந்த பிள்ளை
தனித்து தவித்திருக்க
இருண்டது வானவெளி...
இறைத்த பொறி போலே..
எங்கும் நட்சத்திரம்...
எது எனது தாயின் முகம்...?
எது எனது தாயின் கரம்...?
பக்கத்து வீடொன்றின்
படிதாண்டி ஒருகுழந்தை
தவழ்ந்து வந்திந்த
தளிர்மீனின் அருகமர்ந்து தடவிகொடுத்தது
அம்மாவை அடைவதற்கா வழி வேண்டும்
அடப்பாவி..இப்போது பாரென்று
கைதூக்கி கண்மூடி
முகம் சுளித்து முழுக்குரலில்
`அம்மா`வென அலறியது...
ஒரு நொடியில் உள்ளிருந்து
ஓடோடி வந்த தாயோ..
நட்சத்திரம் பூமியிலே ஒளிர்வதையும் பாராது
தன் குழந்தை முகம்துடைத்து தழுவியபடி உள்சென்றாள்
நட்சத்திர குழந்தைக்கும் நம்பிக்கை மின்னியது..!
கைதூக்கி முகம் வாடி
கண்மூடி வான் நோக்கி
`அம்மா`வென ஓலமிட்டு
அழைத்த நொடி வானின்று
வழிந்து இறங்கியது ஒளிக்கீற்று..!
வாரி அணைத்து வருடியபடி சென்றாள் நட்சத்திர தாய்..!
எளியோரின் நலம் பேண
இளைத்தோரின் துயர் களைய
வலியோரின் வார்த்தைகளோ
வண்ணமிகு வருணணையோ
உதவாது ஒரு போதும்...
முகம் வாடி கைதூக்கி நோய்நீக்க
முழு மனதாய் நம்பிக்கையுடன்...
`அம்மா`வென அழுது அழைத்தோருக்கு
என் தாயே..! தங்கத் தாரகையே..! நீ
ஒரு நொடியில் ஓடிவந்து துயர் களைந்தாய்!
ஒப்பற்ற திட்டம் தந்தாய்..!
வாழி நின் புகழ்! வையம் உள்ளவரை...!
பக்தியுடன்
அம்மா என் தெய்வம்
வல்லம் தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக