புதன், 11 ஜனவரி, 2012

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜெயலலிதா தொடங்கிவைத்தார்


t


தாய் சொல்லை மீறிய

நட்சத்திர குழந்தையொன்று

வான விளிம்பிற்கு வந்து

வழுக்கி விழுந்தது பூமியில்..


காணாமல் தாய்முகத்தை

கலங்கி அழுதது...கண்ணீர் விட்டது..

எப்படி சேர்வேன் என் தாயை மீண்டுமென

ஏங்கி பரிதவித்து ஏமாந்து நின்றது..


குழந்தைகள் கூட்டமொன்று-குட்டிமீன்

கூக்குரலை கேட்டுநொந்து

பட்டம் செய்ததிலே படுக்கவைத்து விண்துளியை

பரிவுடனே அனுப்பிவைத்தார் தாயிடத்தில்


சிறுகுழந்தை பட்டமெல்லாம்

சேர்ந்த்திடுமா விண்வெளியை..?

சோர்ந்து களைத்தவர்கள்

சேர்ந்தனர் தம் ஆசனிடம்

சொல்லியழுதனர் தாய்பிரிந்த

சுடர்குழந்தை சோகத்தினை...


ஆசிரியர் நேசமுடன் அரவணைத்து பாசமுடன் கேட்டார்

`எத்தனை மைல் தூரமுந்தன் தாயின் இருப்பிடம்?

எப்படிதான் இருக்குமுந்தன் தாயின் திருமுகம்?


பாவம் பட்டுத்துணுக்கு போலே

பளீரிட்ட வான் குழந்தை

ஏதுமறியாது பரிதவித்து நின்றது

எதுவும் தெரியாது நான் சிறுகுழந்தையென்றது


ஓடிச்செல்லுங்கள் அறிவியலார்

ஒருவரிடம் என்றார் ஆசிரியர்

விஞ்ஞானி குழந்தையின் விம்மல் தாங்காமல்

விண்கலம் செய்ததிலே விண்ணுக்கு அனுப்பி வைத்தார்


பாவம் அந்த கலனும்

பாதியிலே திரும்பி வர

அழுதபடி அதனுள்ளே

அபலையாய் அக்குழந்தை...


என் செய்ய...?


வலியவிதி வழிநடத்த

வழிதவறி வந்த பிள்ளை

தனித்து தவித்திருக்க

இருண்டது வானவெளி...


இறைத்த பொறி போலே..

எங்கும் நட்சத்திரம்...

எது எனது தாயின் முகம்...?

எது எனது தாயின் கரம்...?


பக்கத்து வீடொன்றின்

படிதாண்டி ஒருகுழந்தை

தவழ்ந்து வந்திந்த

தளிர்மீனின் அருகமர்ந்து தடவிகொடுத்தது


அம்மாவை அடைவதற்கா வழி வேண்டும்

அடப்பாவி..இப்போது பாரென்று

கைதூக்கி கண்மூடி

முகம் சுளித்து முழுக்குரலில்

`அம்மா`வென அலறியது...


ஒரு நொடியில் உள்ளிருந்து

ஓடோடி வந்த தாயோ..

நட்சத்திரம் பூமியிலே ஒளிர்வதையும் பாராது

தன் குழந்தை முகம்துடைத்து தழுவியபடி உள்சென்றாள்


நட்சத்திர குழந்தைக்கும் நம்பிக்கை மின்னியது..!


கைதூக்கி முகம் வாடி

கண்மூடி வான் நோக்கி

`அம்மா`வென ஓலமிட்டு

அழைத்த நொடி வானின்று

வழிந்து இறங்கியது ஒளிக்கீற்று..!

வாரி அணைத்து வருடியபடி சென்றாள் நட்சத்திர தாய்..!


எளியோரின் நலம் பேண

இளைத்தோரின் துயர் களைய

வலியோரின் வார்த்தைகளோ

வண்ணமிகு வருணணையோ

உதவாது ஒரு போதும்...


முகம் வாடி கைதூக்கி நோய்நீக்க

முழு மனதாய் நம்பிக்கையுடன்...

`அம்மா`வென அழுது அழைத்தோருக்கு

என் தாயே..! தங்கத் தாரகையே..! நீ

ஒரு நொடியில் ஓடிவந்து துயர் களைந்தாய்!

ஒப்பற்ற திட்டம் தந்தாய்..!


வாழி நின் புகழ்! வையம் உள்ளவரை...!


பக்தியுடன்

அம்மா என் தெய்வம்

வல்லம் தமிழ்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

அரசு ஊழியர்களுக்கு ரூ 3 ஆயிரம் போனஸ்: முதல்வர் உத்தரவு


அரசு ஊழியர்களுக்கும் அம்மாவுக்கும் இடையில் ஏதோ இணைய முடியாத பெரும்பகை இருப்பதைப்போல் படம் காண்பித்து அந்த மாயத்தோற்றத்தை நம்பி ஏமாந்த அப்பாவி அரசு ஊழியர்களை தங்களது வழ்க்கமான அடுக்குமொழி ஏமாற்று வித்தையால் மயக்கி தங்களது ஓட்டு வங்கியாக வைத்திருந்த வஞ்சகர்களின் சூழ்ச்சியை இப்போதாவது அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அம்மா அரசு ஊழியர்களுக்கு செய்த நன்மைகளை வரிசையாக என்னால் பட்டியலிட முடியும்

1 . உச்ச நீதி மன்றமே வேலைநிறுத்தம் செய்வது சட்ட விரோதம் தான் என கைவிரித்த பிறகும் எங்க அம்மா தனது தணியாத கருணை கரம் விரித்து ஆதரித்ததால் தான் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அன்று பணியில் சேர முடிந்ததே தவிர இவர்கள் ஏமாற்றுவது போல் வழக்கு போட்டு ஜெயித்ததால் இல்லை.இதை விட பெரிய கொடுமை வேலை நிறுத்த தடை சட்டத்தை நீக்குவோம் என சத்தியம் செய்து அரசு ஊழியர்களை தங்களது வாக்கு வங்கியாக இன்னும் கூடுதலாக தங்கள் கட்சி அடிப்படை தொண்டன் போல் வேலை வாங்கி கொண்ட கட்சிகள் மத்தியிலும் ,மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்து பல வருடங்கள் ஆன பின்னும் ஏன் இன்னும் அரசு ஊழியர் வேலைநிறுத்த தடைசட்டத்தை திரும்ப பெற வில்லை??.

2 இன்று மத்திய அரசு ஊழியருக்கு இணையாக சம்பளம் பெறும் அரசு ஊழியர் ஒவ்வொருவரும் நன்றியோடு என் தெய்வம் அம்மாவை நினைத்து பார்க்க வேண்டும்.ஏனெனில் இன்று நீங்கள் வாங்கும் சம்பளம் தனது ஆட்சி காலத்தில் எங்க அம்மா இட்ட(நீங்கள் பலர் தூண்டிவிட்டு நடத்திய போராட்டத்திற்கு பிறகும்) அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் அரசு ஆணையின் அடிப்படை ஊதியத்தை அடிப்படையாக கொண்டே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 .மனதை தொட்டு சொல்லுங்கள் அரசு வேலையில் அரசியல் குறுக்கீடு என்பது அம்மா ஆட்சியில் நடக்க முடியுமா?சாதாரண வட்டக்கிளை செயலரிடம் பல அதிகாரிகள் கை கட்டி நின்றதை நாம் போன ஆட்சியில் பல முறை பார்த்திருக்கலாம் ,இன்று ஏதேனும் ஒரு அமைச்சர் அப்படி மிரட்டிவிட்டு பதவியில் தொடர முடியுமா? சுத்தமான ,அச்சமற்ற சூழலில் நீங்கள் பணியாற்றுவதை எங்க அம்மாவை தவிர யாரால் உத்திரவாதபடுத்த இயலும்? அப்படி பயமற்று சுதந்திரமாக பணிபுரிவதை விட சில ஆயிரம் ரூபாய் சலுகைகள் பெரிதென்றா நினக்கிறீர்கள்..? இனியாவது கருணையும் ,கண்டிப்பும் இரு கண்களாக கொண்டு அருளாட்சி நடத்தும் என் தெய்வத்தின் அரசாட்சிக்கு துணை நின்று வரலாற்று சாதனைகள் நிகழப்போகும் இந்த காலகட்டத்தின் ஒருசாட்சியாக மாறுங்கள்...மிகுந்த நன்றியுடன் அம்மா என் தெய்வம் வல்லம் தமிழ்

திங்கள், 26 டிசம்பர், 2011

தங்கத்தாரகையே...! தாயே..!



நீதியும் நேர்மையும் கண்களாய் கொண்டாள்!

நீசர்கள் தமக்கே நெருப்பாய் நின்றாள்!

ஆதியும் அந்தமும் நானே என்றாள்!

அழிவிலா பெரும்புகழ் அடைவாளென் தாய்..!



`ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்`

வங்ககடலோரம் கண்ணுறங்கும் வள்ளல் சொன்னதை

தங்கத்தாரகையே நீ தட்டாமல் செய்தாய் -அதனால்

வள்ளலின் வாரிசு நீ தான் என்று மெய்ப்பித்தாய்...!


வியாழன், 6 அக்டோபர், 2011

முழு நிலவு...!

முழுநிலவின் ஒளியழகை

தெருவிளக்கா தெரியச்செய்யும்?

கலைநிலவே உனதெழிலை

அணிகலனா அறியச்செய்யும்..?

அணிந்ததனால் பொன்நகைகள்

அழகு பெற்றன அன்று...

பொறுக்காத குறுமதியார்

பொய்புரட்டை அவிழ்த்துவிட

புன்னகையே அணிகலனாய்

புனைந்திருந்தாய் வெகுகாலம்

அன்னையர்கள் மனமுருகி

அனுதினமும் கேட்டபின்பும்

தவம்போலே தவிர்த்திட்டாய்

தங்கநகை என் தாயே....

அம்மா உன் துறவு நிலை

சகியாத தொண்டர்களின் குரல்வலுத்து

உயிர்மறுத்து அணிவகுத்தார்

என் மக்கள் தொண்டர்களே

என்ற சொல்லை மெய்ப்பிக்க

தாலிக்கு தங்கம் தந்து

ஆணையிட்ட கையினால் தான்

அணிந்துகொண்டாய் பூத்தோடு...!

அம்மா...என் தெய்வமே...!

அரக்கர்கள் மொழிகேட்டு-அதை

களைவதை நிறுத்திவிடு இத்தோடு...!






செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இதயக்கனியின் இதயத்துடிப்பு..!


கல்லறையின் மீதும் காதுவைத்து

புரட்சித்தலைவரின்

கடிகார துடிப்பு தேடும்

கண்மணிகளே...!

கண்திறந்து கவனித்துப் பாருங்கள்...

அம்மாவின் ஆட்சியெனும் வடிவில்

இப்போது அவரது

இதயத்துடிப்பே

உணரக்கிடைக்கும் உங்களுக்கு...!


ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மகா மாரி...!


தேன் கூடு திரண்டது போல்

நிறங்கொண்ட வானம் நேற்று

வழிந்தது மதுத்துளியாய்

வழியெங்கும் வெள்ளக்காடு

மழையாய் பொழிந்து இந்த

மண்ணை வளப்படுத்துபவளை

நாங்கள் மாரி என்போம்...!- அந்த

மழை நீர் சேகரிக்க திட்டம் தீட்டி-எங்கள்

மனதெல்லாம் குளிர வைத்தாய் உன்னை

மகா மாரி என்போம்...!


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

நல் சுடரே...!

நேற்றொன்று சொல்லி பின்பு

இன்றொன்று மாற்றி இனிமேல்

நாளையென் சொல்வோம் எனவே

நாடகம் பிதற்றும் பொய்யர்


நடுவினில் உதித்த நல்சுடரே வாழி!

எடுத்த நல்முடிவினில் என்றும்

நழுவாத மனத்துணிவு! வார்த்தை

பிறழாத அறச்செறிவு !

தூய்மையே வாய்மையாய் கொண்டாய்

துயரில்லை இனி உனக்கு!