நேற்றொன்று சொல்லி பின்பு
இன்றொன்று மாற்றி இனிமேல்
நாளையென் சொல்வோம் எனவே
நாடகம் பிதற்றும் பொய்யர்
நடுவினில் உதித்த நல்சுடரே வாழி!
எடுத்த நல்முடிவினில் என்றும்
நழுவாத மனத்துணிவு! வார்த்தை
பிறழாத அறச்செறிவு !
தூய்மையே வாய்மையாய் கொண்டாய்
துயரில்லை இனி உனக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக