ஏகரூப சௌந்தர்ய பேரழகே போற்றி!
ஏழிசையாய் எங்கும்நிறை மந்திரமே போற்றி!
ஏழைகளின் துயர்துடைக்கும் எழில்கரமே போற்றி!
ஏந்திழையே தமிழ் பெற்ற நல்வரமே போற்றி!
ஏணியென அடியவரை ஏற்றிநிற்பாய் போற்றி!
ஏடு உடை மாணவர்க்கு வழங்கிடுவாய் போற்றி!
ஏறுவண்டி கணிணிகூட எடுத்தளித்தாய் போற்றி!
ஏதுமற்ற வரியவரின் பெரும்பொருளே போற்றி!
ஏவலர்கள் காவலர்கள் நலம்காத்தாய் போற்றி!போற்றி!